முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு: குஜராத்தில் இன்று முதல் அமல்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்ட வடிவம் பெற்றுள்ள வருமானத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று முதல் அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி விஜய் ருபானி அறிவித்துள்ளார்.

பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா சமீபத்தில் நிறைவேறியது.

ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார். இதைதொடர்ந்து அவரது ஓப்புதலுடன் இதற்கான இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கையும் வெளியானது. இதன்மூலம் நாடு முழுவதும் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று முதல் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல் மந்திரி விஜய் ருபானி அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்த சட்டத்தை முதன்முதலாக நடைமுறைப்படுத்தும் மாநிலமாக குஜராத் சிறப்பிடம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து