முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

நொய்டா : சாமானிய மக்கள், பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கை வைத்திருப்பதால் வரும் பொதுத் தேர்தலில் அரசுக்கு எந்த சவாலும் இல்லை என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உறுதிபட கூறியுள்ளார். 

கிரேட்டர் நொய்டாவில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில், கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டுவதற்கு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று அடிக்கல் நாட்டினார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வரும் தேர்தல் பா.ஜ.க அரசுக்கு பெரிய சவாலாக இருக்குமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், அரசுக்கு எந்த சவாலும் இல்லை என கூறினார்.

பின்னர் கொல்கத்தாவில் மம்தா தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் வலிமையை காட்டியது குறித்த கேள்விக்கு பதிலளித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

பா.ஜ.க.வின் வெற்றியைப் பார்த்து பயந்து போனதால், அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற பயம் அவர்களுக்கு வந்து விட்டது. ஆனால் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி. மோடி தலைமையில் நாங்கள் வலுவான பிரபலமான தலைமையை பெற்றிருக்கிறோம். சாமானிய மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். 4.5 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே, வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த சூழ்நிலை உங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து