முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

118-வது பிறந்த நாள் :தேவநேயப் பாவாணரின் திருவுருவச்சிலைக்கு அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பிஉதயகுமார் மாலையணிவித்து மரியாதை

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      மதுரை
Image Unavailable

மதுரை, -மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 118-வது பிறந்த நாள் விழா நேற்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மிகச்சிறப்புடன்நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் திருவுருவச்சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ச.நடராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா(மதுரை வடக்கு)பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு மாலையணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நினைவு மண்டபத்தில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல், உதவி மக்கள்தொடர்பு அலுவலர்(செய்தி) சே.ரா.நவீன்பாண்டியன் உள்ளிட்ட தமிழ் சான்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து