முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க உறுதி ஏற்க வேண்டும் - பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பேச்சு

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

ஈரோடு : மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க உறுதி ஏற்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

விமானம் மூலம்...

பாஜக தலைவர் அமித் ஷா நெசவாளர் பிரதிநிதிகளை சந்தித்து உரையாட ஈரோட்டிற்கு நேற்று வருகை தந்தார். இதற்காக அவர் தில்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை கோவை மாவட்ட பாஜக தலைவர் சி.ஆர்.நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அமித் ஷாவை விமான நிலையத்தில் வரவேற்றனர். தொடர்ந்து கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோட்டிற்கு வந்தார். பின்னர் சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலியில் நெசவாளர் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடினார்.

உறுதி ஏற்கவேண்டும்...

அப்போது பேசிய அவர், மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க நாம் உறுதி ஏற்கவேண்டும். மக்களின் பங்களிப்போடு ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பின்தங்கிய ஜவுளித்துறையை பாஜக அரசுதான் மேம்படுத்தி வருகிறது. மக்களின் தேவைகளை கேட்டறிந்து அதனைத் தேர்தல் அறிக்கையிலேயே இணைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து