முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாக்குதலில் பலியான வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் அஞ்சலி...

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன. பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாரமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் உத்தரவு...

டெல்லியில் வைக்கப்பட்டுள்ள வீரர்களின் உடல்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதற்கிடையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து