முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்புக்கு புல்வாமா தாக்குதலில் தொடர்பில்லையாம் - பாக்கிஸ்தான் சொல்கிறது

சனிக்கிழமை, 2 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

புது டெல்லி : புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்புக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் கூறி உள்ளது.

பாகிஸ்தான் வெலியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது;-

ஜெய்ஷ் - இ - முகமது தலைமையிடம் தொடர்பு கொண்ட போது அவர்கள் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என கூறி உள்ளனர். பாகிஸ்தான் சமாதானத்தை விரும்புகிறது. நாம் முன்னோக்கி செல்ல உறுதிப்பாடோடு செயல்பட வேண்டும். புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு பொறுப்பை ஏற்கவில்லை. அதில் சில குழப்பங்கள் உள்ளன என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து