முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் எங்களிடம் ஆட்சியை கொடுத்தால் ஊழல் செய்த காங். தலைவர்கள் ஜெயிலுக்குள் இருப்பார்கள் - குஜராத் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : இன்னும் 5 ஆண்டுகள் எங்களிடம் ஆட்சியை கொடுத்தால் காங்கிரஸ் தலைவர்களை ஜெயிலுக்குள் தள்ளுவேன் என்று குஜராத் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஜுனாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

ஜெயிலுக்குள் ..

காங்கிரசார் ஏழைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான பணத்தையும் கொள்ளையடித்து இருக்கிறார்கள். ஒரு காலத்தில் கர்நாடக மாநிலம் காங்கிரசாருக்கு பணம் கொட்டும் ஏ.டி.எம். எந்திரமாக இருந்தது. இப்போது மத்திய பிரதேச மாநிலம் காங்கிரசின் ஏ.டி.எம். ஆக மாறி இருக்கிறது. ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரசார் இன்று ஜெயில் கதவை தட்டும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் எங்களிடம் ஆட்சியை கொடுத்தால் அவர்கள் ஜெயிலுக்குள் இருப்பார்கள்.

திட்டுகிறார்கள்

நாம் பாகிஸ்தானில் விமான தாக்குதல் நடத்தினோம். ஆனால் அது இந்தியாவில் உள்ள காங்கிரசை பாதிக்கிறது. உங்களின் மைந்தனாகவும், காவலனாகவும் உள்ள என்னை டிக்‌சனரியில் உள்ள அனைத்து மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தி திட்டுகிறார்கள். நாட்டில் இருந்து காஷ்மீரை பிரிக்க வேண்டும், அங்கு தனி பிரதமர் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கிறது.

நேரு தலையீடு

நாட்டில் உள்ள அனைத்து மன்னர் பிரதேசங்களையும் சர்தார் வல்லபாய் பட்டேல் வெற்றிகரமாக இந்தியாவோடு இணைத்தார். ஆனால் நேரு தலையீடு காரணமாக காஷ்மீரில் மட்டும் அது நடக்கவில்லை. இதனால்தான் இன்று நமது வீரர்கள் தங்கள் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து