முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் போட்டியிட இதுவரை நான் சீட் கேட்டதே இல்லை: குஷ்பு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, தேர்தலில் போட்டியிட நான் சீட் கேட்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார்.

பெங்களூரில் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று சொன்னேனா? எனக்கு இதுபோன்ற வதந்திகள் புதிதல்ல. தி.மு.க.வில் இருக்கும் போது 2011-ல் இதே பேச்சு வந்தது. 2014, 2016 மற்றும் 2019 வரை இதே பேச்சு தொடர்ந்து கொண்டிருகிறது. எனக்கு இது பழக்கமாகி விட்டது. ஒவ்வொரு முறையும் சீட் கொடுக்கவில்லை. அதனால் குஷ்பு வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள். நான் எப்போது சீட் கேட்டேன்? தி.மு.க.விலோ, காங்கிரசிலோ இதுவரை நான் சீட்டு கேட்டதே இல்லை. நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர். அது தொடர்பான பணிகளே நிறைய இருக்கிறது. பல்வேறு மாநிலங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது. தேசிய பொறுப்பில் இருப்பதால் இந்தியா முழுவதும் சென்று கொண்டிருக்கிறேன். அதற்காக நான் செல்லும் இடமெல்லாம், நானும் ஜெயிலுக்கு போறேன் என்று தண்டோரா போட முடியாது. என்னைப் பற்றி கட்சிக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து