முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 பயங்கரவாதிகள் பலி - ஈராக் ராணுவம் அதிரடி

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

பாக்தாத் : ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் 7 பேர் பலியானார்கள்

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல் -அபாடி அறிவித்தார். ஆனால் சமீப காலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஈராக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த சிலரை சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 7 தலைவர்கள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து