எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்குப் பிறகே தெரிய வரும். சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 19-ம் தேதியன்று 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தலும் நடந்தது. வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்களும், அதனுடன் இணைக்கப்பட்டு இருந்து ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஒரு மையத்துக்கு 41 மேஜை என்ற கணக்கில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும். செனனை மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை லயோலா கல்லூரி (மத்திய சென்னை), ராணி மேரி கல்லூரி (வட சென்னை), அண்ணா பல்கலைக் கழகம் (தென் சென்னை) ஆகிய 3 மையங்களில் நடைபெறும். தமிழகம் முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சென்னை மையங்களில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்களும் ஈடுபடுவார்கள்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை சரி பார்ப்பதற்காக இந்த முறை ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஒரு சட்டமன்றத்துக்கு 5 ஒப்புகை சீட்டு இயந்திரம் என்ற வகையில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும் உள்ளடக்கிய தொகுதிகளை ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும். ஒவ்வொரு ஒப்புகை சீட்டு இயந்திரத்திற்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்த தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள். இதனால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணி விட்டு கடைசியில்தான் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.
தபால் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் கூடுதல் மேஜை போடப்பட்டு அவை எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கையில் துரிதம் காட்டுவதை விட துல்லியமாகவும், சரியாகவும் எண்ணிக்கை அமைய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. எனவே கடந்த ஆண்டுகளில் நடந்தது போல இந்த முறை விரைவாக முடிவுகளை எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது. ஓட்டு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர், துணை பார்வையாளர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருப்பார்கள். வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்கு எண்ணும் இயந்திரங்களின் எண், ஒப்புகை சீட்டு இயந்திரங்களின் ஆகியவற்றை காட்டிய பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
வாக்கு எண்ணிக்கையை ஒப்புகை சீட்டுடன் சரி பார்க்க வேண்டியதிருப்பதால் ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் சற்று காலதாமதமாகவே அறிவிப்பு வெளியாகும். எனவே தேர்தலின் உத்தேச முடிவை மதியத்துக்கு பிறகு தான் அறிய முடியும். இறுதி முடிவை பெறுவதற்கு இரவு ஆகலாம் என தெரிகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் முடிந்து விடும். சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளில் தொகுதிக்கு 5 வி.வி.பாட். இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு அதில் உள்ள ஒப்புகை சீட்டுகளும் எண்ணி சரி பார்க்கப்படுவதால் முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆகும். ஒரு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் உள்ள வாக்கு சீட்டுகளை எண்ண குறைந்தது 40 முதல் 50 நிமிடங்கள் வரை ஆகலாம். எனவே சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு பிறகே தெரிய வரும். பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகவும் இதே போல் காலதாமதமாகும். உ.பி. ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தொகுதிக்கு ஒரு விவிபாட் இயந்திரம் மட்டும் பொருத்தப்பட்டிருந்தது. அதை எண்ணி முடிக்கவே நள்ளிரவாகி விட்டது. அதே போன்ற நிலைதான் தமிழகத்திலும் ஏற்படும். எனவே பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும். வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் போது தடங்கல் ஏற்பட்டால் முதலில் அதில் உள்ள பேட்டரி மாற்றப்படும். அதன் பின்னும் பிரச்சினை இருந்தால் விவிபாட் ஒப்புகை சீட்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.