முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் கிரன்பேடி தொடர்ந்த வழக்கு: புதுவை அமைச்சரவை கூட்ட முடிவுகளை அமல்படுத்த தடை சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்த 10 நாட்கள் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி நிர்வாகத்தில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை என சென்னை ஐகோர்ட் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்றும் கவர்னர் கிரண்பேடி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்தனர்.

புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் கூட உள்ளதால் ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடினார். இடைக்கால தடை விதிக்காவிட்டாலும் கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும் என அவர் வாதாடினார். இடைக்கால உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. இருப்பினும் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி அமைச்சரவை முடிவை அமல்படுத்த 10 நாட்கள் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து