முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும்: ரணில்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று மோடியிடம் வேண்டுகோள் விடுத்ததாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில் பிரதமர் மோடியுனான சந்திப்பு குறித்து இலங்கை பிரதமர் ரணில் கூறியிருப்பதாவது:-

தாமதமாக நடைபெற்று வந்த இந்தியா - இலங்கை இணைந்து செயல்படுத்தி வரும் திட்டங்களை விரைவாக முடிப்பதாக பிரதமர் மோடிக்கு உறுதி கொடுத்துள்ளேன். இந்தியா, இலங்கை இணைந்து மேலும் பல கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதன் மூலம் இருநாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு உறுதி செய்யப்படும். இலங்கைக்கு மோடி தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது இலங்கையின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும், இன்னும் அதிக மக்கள் இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும். இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை மூலம் இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் நாங்கள் பேசினோம். இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கான பயிற்சியை இந்தியா அளிக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து