எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மக்காச்சோளத்தைப் பயிரிட்டு அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 93 ஆயிரத்து 424 விவசாயிகளின் துயர் துடைக்க மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இறவைப் பயிருக்கு ஹெக்டேருக்கு 13,500 ரூபாயும், மானாவாரிப் பயிருக்கு ஹெக்டேருக்கு 7,410 ரூபாயும் என்ற விகிதத்தில், மொத்தம் 186 கோடியே 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக, நமது மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியில் மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்காச்சோளம் பயிரிடுபவர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் சிறு, குறு விவசாயிகள் தான். ஆடி, புரட்டாசி மற்றும் சித்திரைப் பட்டங்களில் 80 சதவீதம் மானாவாரியாகவும், எஞ்சியுள்ளவை இறவைப் பயிராகவும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.5 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படுகிறது. வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மாறிவரும் பருவநிலை காரணமாக, அமெரிக்காவில் மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழு அமெரிக்காவில் இருந்து 2016-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி 2018-ம் ஆண்டு நமது நாட்டிலும் பரவியது. தற்போது, நம் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், சீனா, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளிலும் பரவி குறிப்பாக மக்காச்சோளப் பயிரினை தாக்கி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்கன் படைப்புழு, கடந்த 2018-ம் ஆண்டில் கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் நமது மாநிலத்திலும் மக்காச்சோளப் பயிரைத் தாக்கியது. இப்புழுவின் தாக்குதல், மக்காச்சோளப் பயிரின் அனைத்து நிலைகளிலும் விரைவில் பரவி பெருமளவு சேதத்தை ஏற்படுத்தும் தன்மை உடையது. இப்படைப்புழுவின் தாக்குதல் பற்றி எனது கவனத்திற்கு வந்ததும், பயிர் பாதிப்பினை கணக்கெடுக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினருக்கு உடனடியாக நான் உத்தரவிட்டேன். பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேளாண்மைத் துறைக்கு நான் உத்தரவிட்டேன்.
அது மட்டுமன்றி, மாநில பேரிடர் நிவாரண நிதியின் வரையறைகளின்படி இம்மாதிரியான பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வழிவகை இல்லாத காரணத்தால், இந்த வகையான பயிர் பாதிப்பினையும் வரையறைகளில் சேர்த்து, நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டேன். உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இப்படைப்புழு கடந்த ஆண்டு முதன்முதலாக தாக்கியதால் சாகுபடி செய்யப்பட்ட 3.55 லட்சம் ஹெக்டேரில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 986 எக்டர் பாதிப்படைந்தது.
வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினர் துரிதமாக கணக்கெடுத்ததன் அடிப்படையில், மக்காச்சோளத்தைப் பயிரிட்டு அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 93 ஆயிரத்து 424 விவசாயிகளின் துயர் துடைக்க மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இறவைப் பயிருக்கு ஹெக்டேருக்கு 13,500 ரூபாயும் மானாவாரிப் பயிருக்கு ஹெக்டேருக்கு 7,410 ரூபாயும் என்ற விகிதத்தில், மொத்தம் 186 கோடியே 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இப்புழு தாக்குதலைத் தடுக்க, கோடை உழவு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கவும், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இப்படைப்புழு தாக்குதலில் இருந்து பயிர்களைக் காத்து விவசாயிகளின் நலன் காக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு என்றென்றும் விவசாயிகளின் துயர் துடைக்கும் அரசாகவே விளங்கி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை மக்காச்சோளம் பயிரினை சாகுபடி செய்து இப்புழுவின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது தவிர, ஏற்கனவே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து இப்புழுவினால் பாதிப்படைந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினையும் பெற்றுத் தர வேளாண்மைத் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இது வரை சேராத வேளாண் பெருமக்களும், எதிர்வரும் காலத்தில் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொருளாதார ரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக இத்திட்டத்தில் சேர வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.