முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம். -மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.இதில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட மதுரை கோட்ட ரயில்வே டி.எஸ்.பி.,டி.ஆர்.இளங்கோ தலைமையில் மதுரை ரயில்வே காவல்துறை ஆய்வாளர்  ராஜசேகர் முன்னிலையில் ஆர் பி எஃப், ரயில்வே காவல் துறைகள் இணைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
 மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்யும்பொழுது பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது எப்படி என்பது குறித்த விளக்க உரை மற்றும் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையம் முழுவதும் தமிழ்நாடு ரயில்வே காவல் துறையும் மற்றும் மத்திய ரயில்வே காவல் படையும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் உடமைகள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்த பிறகே பயணிகள் ரயில் நிலையத்துக்கு அனுமதிக்கப் படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து