முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி- கிருஷ்ணன், அமித்ஷா அர்ஜூனன் - சென்னை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் பாராட்டு தெரிவித்தார்.

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல் எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர். 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட என்னை நினைவு வைத்திருப்பவர். அவர் சிறந்த ஆன்மீகவாதி. அவர் தப்பித்தவறி அரசியலுக்கு வந்து விட்டார். காஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவிற்கு வாழ்த்துக்கள். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது. பாராளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அமித்ஷாவுக்கும் மோடிக்கும் தெரியும் என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து