முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கான் பாகிஸ்தானின் மிக மோசமான பிரதமர் - பாக். கவிஞர் தாக்கு

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கொள்கைகள், ஊழல் மற்றும் அநீதிக்காக கடுமையாக விமர்சனம் செய்து பாகிஸ்தானியக் கவிஞர் ஒருவர் பேசியுள்ள புதிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

பாகிஸ்தானின் பிரபலமான கவிஞர் ஃபர்ஹத் அப்பாஸ் ஷா பாகிஸ்தானின் உள்ளூர் செய்தி சேனலான லாகூர் டிவிக்கு அளித்த பேட்டியில் நாட்டின் பரிதாபகரமான நிலைமை குறித்து இம்ரான் கானை விமர்சித்துள்ளார்.

ஒரு கவிதையாகவே பாடியுள்ள அவரது விமர்சனங்களில் குறிப்பிட்டுள்ளதாவது:

இம்ரான், தங்கள் ஆட்சியில் நாட்டின் நிலைமை மோசமாகிவிட்டதால், நீங்கள் ஒரு பிரதமராக முற்றிலும் தோல்வியடைந்துவிட்டீர்கள். உங்கள் கொள்கைகள் எங்களைப் பிச்சைக்காரனாக்கி விட்டன. நீங்கள் அதிகாரத்தில் இருக்கத் தகுதியற்றவர், நீங்கள் ஏன் வந்தீர்கள்?

உங்கள் ஆட்சியில் வறுமை, ஊழல் மற்றும் அநீதிகளை நாட்டின் குடிமக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் எங்களைத் தோல்வியுறச் செய்துவிட்டீர்கள்.தேர்தலுக்கு முன்னர், நாட்டை வறுமை மற்றும் ஊழலிலிருந்து விடுவிப்பதாக உறுதியளித்தீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால், குடிமக்கள் உங்கள் பதவிக் காலத்தில் கூட பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதுதான்.இம்ரான் நீங்கள் பாகிஸ்தானின் மிக மோசமான பிரதமர்.

நீங்கள் ஒரு மறைவில் இருக்கிறீர்கள். அந்த மறைவை விட்டு வெளியே வாருங்கள். வந்து வீதிகளில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள் இம்ரான். அப்படிப் பார்த்த பிறகாவது நாட்டை வறுமை மற்றும் ஊழலிலிருந்து காப்பாற்றுங்கள்''. இவ்வாறு ஃபர்ஹத் அப்பாஸ் ஷா தனது கவிதைகளின் வாயிலாக இம்ரான் கானை விமர்சித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து