முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல தெலுங்கு நடிகரின் பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் மனித உடல் ஒன்று அழுகிய நிலையில் எலும்புக் கூடாக கிடந்தது குறித்து தெலுங்கானா காவல்துறை விசாரித்து வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தின் மஹாபப்நகர் மாவட்டத்தில் பப்பிரெட்டிகுடா கிராமத்தில் நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீடு ஒன்று உள்ளது. 40 ஏக்கர் பண்ணை வீட்டை நாகார்ஜூனா சமீபத்தில் வாங்கியுள்ளார். பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த பண்ணை வீட்டை சுத்தம் செய்ய பணியாளர்களை அனுப்பியுள்ளார் நாகார்ஜூனா. அப்பணியில் அவர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஒரு பகுதியில் துர்நாற்றம் அடிப்பதை பணியாளர்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் பண்ணை வீட்டின் பழையக் கட்டிடம் ஒன்றின் அருகே மனித உடல் ஒன்று அழுகிய நிலையில் எலும்புக் கூடாகக் கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர். இதையடுத்து பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கு பிறகு, கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற காவலர்கள், மோப்ப நாயுடன் சென்று எலும்புக் கூட்டைக் கைப்பற்றி, தற்போது இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குக் கிடந்த எலும்புகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட அழுகிய நிலையிலான எலும்புக் கூடு யாருடையது, அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் யாரோ ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பு, இந்தப் பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து