எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வெட்கிரைண்டர், மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட 65 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிகுறைப்பு மற்றும் வரி விலக்கு வழங்க வேண்டும் என்று கோவாவில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற 37-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக்கூட்டத்தில் வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கைகள் கனிவாக பரிசீலிக்கப்பட்டது. விரிவான விவாதத்திற்கு பிறகு கல்லினால் செய்யப்பட்ட அரைப்பான் கொண்ட வெட்கிரைண்டர்கள் மீதான வரியினை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பதற்கு மன்றம் பரிந்துரைத்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு மற்றும் வெட்கிரைண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இன்ஜினியரிங் தொழில் மீதான சில்லறை வேலை தொடர்பான சேவைகளுக்கான வரியானது 18சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது நமது மாநிலத்தில் உள்ள இந்த தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கக்கூடும்.
மேலும், தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் கொப்பரை, கரும்பு, வெல்லம் போன்றவையினை சேமித்து வைப்பது தொடர்பான சேவைகளுக்கு வரியிலிருந்து முற்றிலுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது. ஜிப்புகளின் பாகங்கள் மீதான வரியானது 18 சதவீத்திலிருந்து – 12 சதவீதமாக குறைத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கையான காய்ந்த புளி மற்றும் மரத்தட்டுகள் மற்றும் மரத் தொன்னைகளுக்கு வரியிலிருந்து முழு விலக்களிக்கப்பட்டுள்ளது தமிழக மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். சிப்பமிட பயன்படுத்துவதற்கான பாலி எத்திலின், பாலிபுரோப்பலின் கொண்டு செய்யப்படும் நெய்த அல்லது நெய்யப்படாத பைகள் மற்றும் சாக்கு பைகள் மீது ஒரே சீரான 12 சதவீத வரி விதித்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரம் கருதி 01.07.2017 முதல் 30.09.2019 வரையிலான காலத்திற்கு மீன் துகள்களுக்கு முழு வரி விலக்கு வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வறுகடலை மீதான வரி விகிதம் குறித்து தெளிவுரை வழங்கிடவும் மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டல்களில் தங்குவதற்கான அறை வாடகை ரூ.1000 மற்றும் அதற்கு கீழாக உள்ள பட்சத்தில், முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1001 முதல் ரூ.7500 வரை அறை வாடகை உள்ள பட்சத்தில் 12 சதவீத வரி விதித்திடவும், ரூ.7501 மற்றும் அதற்கு மேலாக உள்ள பட்சத்தில் 18 சதவீதமாக வரி விதித்திடவும் மன்றக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு இந்த வரி விலக்கு மற்றும் வரி குறைப்பானது தமிழகத்தில் சுற்றுலாவை பெரிதும் ஊக்குவிக்கும் விதமாக அமையும்.
வெளிப்புற உணவு வழங்கல் தொடர்பான சேவைகள் மீதான வரி 18 சதவீதத்திலிருந்து உள்ளீட்டு வரி வரவின்றி 5சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய ஆண்டுகளுக்கு இணக்க முறையில் வரி செலுத்துவோர்களால் ஆண்டு கணக்கு விவர அறிக்கை தாக்கல் செய்வதிலிருந்து விலக்களிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.2 கோடி வரை விற்பனை அளவு கொண்ட மற்ற வணிகர்களுக்கும் ஜிஎஸ்டி கட்டாயமாக தாக்கல் செய்வதற்கு பதிலாக அவர்களின் விருப்ப தேர்வின் அடிப்படையில் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிமையாக்கப்பட்ட புதிய முறையில் மாதாந்திர கணக்கு விவர அறிக்கையினை தாக்கல் செய்வதற்கான வசதி வணிகர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், 2020 முதல் அமல்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்திட தமிழ்நாடு அரசால், ஜி.எஸ்.டி. மன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள 65 பொருட்கள் மற்றும் 5 சேவைகள் மீது வரி குறைப்பு செய்திடவும், வரி விலக்கு பெறவும், இனிவரும் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தப்படும். 37-வது சரக்குகள் மற்றும் சேவை வரி மன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கைகள் கனிவாக பரிசீலிக்கப்பட்டதற்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத் தலைவரான மத்திய நிதி அமைச்சருக்கு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.