முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு : தீர்ப்பை ஒத்திவைத்த ஐகோர்ட்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் டெல்லி ஐகோர்ட் ஒத்திவைத்தது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு, கடந்த 11-ம் தேதியில் இருந்து விசாரணையில் இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் தினமும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி சுரேஷ் குமார் ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து