முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். இன்றும் பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து துணைமுதல்வர் ஓ.பன்னீரசெல்வம் இன்றும் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் திருத்தியமைக்கப்பட்ட சுற்றுப்பயண விவரங்களை அ.தி.மு.க. தலைமை கழகம் நேற்று வெளியிட்டது. அதன் விபரம் வருமாறு:

நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களாக ரெட்டியார்ப்பட்டி நாராயணன் முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து விக்கிரவாண்டியில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இன்றும் அவர் காணை ஒன்றியத்தில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை 6 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும்  வரும் 18-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள கோலியனூர் காணை ஒன்றியம், விக்கிரவாண்டி ஒன்றியம் ஆகிய இடங்களில் பேசுகிறார்.

வரும் 15-ம் தேதி நாங்குநேரி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து நாங்குநேரி ஒன்றியத்தில் மூன்றடைப்பு, மருகால் குறிச்சி, வடக்கு விஜயநாராயணபுரம் மற்றும் இட்டாமொழி ஆகிய இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து வரும் 16-ம் தேதி களக்காடு ஒன்றியத்தில் உள்ள வடுகச்சிமதில் , களக்காடு பேரூராட்சி. மீன்வன்குளம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். 17-ம் தேதி பாளையங்கோட்டை ஒன்றியத்தில் உள்ள நடுவக்குறிச்சி, அரியகுளம் மர்ரும் தருவை ஆகிய இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். இவ்வாறு அ.தி.மு.க. செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து