முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசின் மீது  சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்நிலையில், அம்மாநில சட்டசபை சபாநாயகர் பதவிக்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் நானா பட்டோலே வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பா.ஜ.க சார்பில் கிஷன் கத்தோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். சட்டசபையில் பாஜகவின் பலம் குறைவாக உள்ள நிலையில் நேற்று காலை கிஷன் கத்தோர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

இதனையடுத்து, சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

புதிய சபாநாயகராக பொறுப்பேற்கும் நானா பட்டோலே(56) விதர்பா பகுதியில் உள்ள சக்கோலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாகவும் பன்டாரா-கோன்டியா பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து