எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தி.மு.க. வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தோல்வியின் பயத்தில் தி.மு.க. வழக்கு பதிவு செய்திருக்கிறது என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளித்துள்ளது. அதன் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- 9 மாவட்டங்களுக்கு 4 மாதத்திற்குள் மறுவரையறை செய்து தேர்தல் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கை குறித்து...
பதில்:- இது முழுக்க, முழுக்க மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, நீங்கள் தேர்தல் ஆணையத்தைத்தான் கேட்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு கொடுத்திருக்கிறதோ, அதன் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டவுடன், நாங்கள் முழு ஈடுபாட்டுடன் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம். இன்றையதினம் எங்கள் கூட்டணியோடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.
கேள்வி:- ஊராட்சிக்கு மட்டும் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு அறிவிக்கவில்லை, இது வன்முறையை ஏற்படுத்துமென்றும், இது ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்குமென்றும், எதிர்க்கட்சித்தலைவர் கூறியிருக்கிறாரே?
பதில்:- அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் மக்களை சந்தித்து, வாக்குகளைக் கேட்டு, வெற்றி பெறுவதுதான் ஜனநாயகம். அதை விட்டுவிட்டு, தோல்வி பயத்தில் இன்றைக்கு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரையில் மாநில தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த நடைமுறையின்படி, அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து நிறுத்துகின்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
கேள்வி:- ஏற்கனவே அறிவித்த தேர்தல் செல்லாது என்று சொல்லியிருக்கிறார்கள்?
பதில்:- இதெல்லாம் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை, அரசு அல்ல, தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு.
கேள்வி:- இன்னும் வேட்பாளர் அறிவிக்காததன் காரணம் என்ன?
பதில்:- நீங்களே தேர்தல் அறிவிக்கவில்லை என்று சொல்லி விட்டீர்கள், தேர்தலை அறிவிக்காமல் எப்படி வேட்பாளரை அறிவிப்பார்கள். நீதிமன்ற உத்தரவு இப்பொழுது தான் வந்திருக்கிறது. இன்றைக்கு கூட்டணிக் கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம், அதில் பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிப்போம்.
கேள்வி:- தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தி.மு.க. வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதே?
பதில்:- தோல்வியின் பயத்தில் தி.மு.க. வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஏற்கனவே 2016-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே வழக்கு தாக்கல் செய்து தேர்தலை நிறுத்தினார்கள். இப்பொழுதும் அந்த முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. 9 புதிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என்ற ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் கொடுத்திருக்கிறது. அந்த அடிப்படையில், அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்து, உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.