முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவு - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றிய முன்னாள் செயலாளர் இரா. சுப்பிரமணியன், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் பொம்மசமுத்திரம் ஊராட்சி செயலாளர் சின்னசாமி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். அன்பு சகோதரர்கள் சுப்பிரமணியன், சின்னசாமி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து