முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீயணைப்பு மற்றும் காவல் துறைக்காக கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் கடலூர் மாவட்டம், புவனகிரியில் 3 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், 10 கோடியே 76 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 காவலர் குடியிருப்புகள், 3 காவல் நிலையங்கள், 2 காவல்துறை இதர கட்டிடங்கள், ஒரு வட்டார தடய அறிவியல் ஆய்வகக் கட்டிடம், ஒரு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டிடம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 12 குடியிருப்புகள் ஆகியவற்றையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து  வைத்தார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடலூர் மாவட்டம், புவனகிரியில் 3 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 காவலர் குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.  இக்காவலர் குடியிருப்பு, 17 காவலர் மற்றும் தலைமைக் காவலர் குடியிருப்புகள், 3 உதவி ஆய்வாளர் குடியிருப்புகள் மற்றும் ஒரு ஆய்வாளர் குடியிருப்புகளை கொண்டது. மேலும், இக்குடியிருப்புகள், ஆழ்துளை கிணறு, நீர்தேக்க தொட்டிகள், கழிவுநீர் மற்றும் குடிநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் - கன்னிவாடியில் 88 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 காவலர் குடியிருப்புகள், செங்கல்பட்டு மாவட்டம் - சதுரங்கபட்டினம், கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர், சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை (போக்குவரத்து காவல் நிலையம்) ஆகிய இடங்களில் 2 கோடியே 40 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையங்கள், ஈரோடு  மாவட்டம் - ஈரோட்டில் 94 லட்சத்து ஒரு ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டிடம் மற்றும்  திருநெல்வேலி மாவட்டம் - தாழையூத்தில்  54 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு,  சேலம் மாவட்டம் - ஜாகீர் அம்மாபாளையத்தில் 3 கோடியே ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார தடய அறிவியல் ஆய்வகக் கட்டிடம், 

மதுரை மாவட்டம் - கொட்டாம்பட்டியில் ஒரு கோடியே 9 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  ஒரு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டிடம்,  ஈரோடு மாவட்டம் - ஈரோட்டில் ஒரு கோடியே 87 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 12 குடியிருப்புகள் என மொத்தம், 14 கோடியே 13 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தடய அறிவியல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.சி சம்பத், தலைமைச் செயலாளர்  சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் சி. சைலேந்திர பாபு, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்  மஞ்சுநாதா, தடய அறிவியல் துறை இயக்குநர் (பொறுப்பு) சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து