முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி சம்பவம்: ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு தாக்கல் செய்துள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தோருக்கும் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த ரஜினி,  போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சில சமூக விரோதிகளே காரணம். போலீசை மட்டும் குறை கூறுவது தவறு என கூறியிருந்தார். இதையடுத்து வருகிற 25-ம் தேதி ரஜினிகாந்த் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் ரஜினிக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராவதில் இருந்து ரஜினி விலக்கு கேட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக விலக்கு கேட்டு அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி மனு தாக்கல் செய்துள்ளார். ரசிகர்கள் அதிகளவில் கூடினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே நான் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயாராக இருப்பதாகவும் ரஜினி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து