முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலி பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி: கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களில் இயக்கத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. 

உலக மக்களை கொரோனா வைரஸ் பயங்கரமாக அச்சுறுத்தி வரும் இவ்வேளையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24-ம்  தேதி மாலை 6 மணி முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1-ம் தேதி  அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி, கடந்த 24-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களில் இயக்கத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 21 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் தமிழகஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 144 தடை அமலில் உள்ள நிலையில் மக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் அத்தியவாசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவை இல்லாமல் மக்கள் சாலைகளிலோ, தெருக்களிலோ, கடைகளிலோ கூட்டமாக சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து