முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சேலம், இதுவரை தமிழக அரசு  கேட்ட நிதியை  மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

தமிழகத்தில் இதற்கு முன்பாக பல புயல்கள் வந்துள்ளன. எந்த அரசு புயல் நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு புள்ளி விவரத்துடன் நிதி கேட்டபோது, குறைத்து தான் கொடுப்பார்கள். தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே கிடையாது.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, தி.மு.க. மத்தியில் அங்கம் வகித்த காலங்களிலும் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டது. அப்போதும் தி.மு.க. கேட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. மாநில அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை. 

மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த போது தி.மு.க. அரசு நிதியை வாதாடி பெறவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது எத்தனை புயல்கள் வந்தன. அப்பொழுது கேட்ட நிதியையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. இவ்வாறு  அவர் தெரிவித்தார்

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை தூர்வரப்பட்டது.இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கிடப்பில் போடப்பட்டது. மேட்டூர் அணை தூர்வாரப்பட வேண்டும். வண்டல் மண் அதிகமாக தேங்கியுள்ளது. மேட்டூர் அணை தூர்வாரப்பட்டால் கூடுதலாக தண்ணீர் தேக்கி வைக்கப்படும். 

அ.தி.மு.க. ஆட்சி காலத்துக்கு கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடரப்பட்டிருந்தால் மழைக் காலங்களில் ஏரிகளின் நீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தற்போது கோடைகாலத்தில் அது பயனுள்ளதாக இருந்திருக்கும். 

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை நீரேற்று திட்டத்தின் மூலமாக நூறு ஏரிகளில் நிரப்பு இருந்தால், கோடை காலத்தில் பயனுள்ளதாக இருந்திருக்கும். இதையெல்லாம் தி.மு.க. அரசு செய்ய தவறி விட்டது. 

நாட்டில் நடைபெறும் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள், அரசின் கவனத்துக்கு எடுத்து வைக்க வேண்டும். நல்ல எதிர்க்கட்சி மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு எடுத்து வைத்தால் தான், அரசு கவனமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து