முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் மீது காதல் இருக்கும் வரை விளையாடுவேன்: சச்சின்

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச்.24 - என்னைப் பற்றிய விமர்சனங்கள் எனக்கு கிரிக்கெட்டை கற்றுத் தரவில்லை. என் ஆட்டத்திறன் கொஞ்சம் குறைந்தால் கூட விளையாட்டில் இருந்து விலகி விடுவேன் என்று சச்சின் கூறியுள்ளார். 100 வது சதமடிக்க சச்சின் கடுமையாக போராடி வந்த போது அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மற்றும் ஊடகங்கள் கூறியிருந்தன. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சச்சின் இவ்வாறு கூறியுள்ளார். ஓப்பன் என்ற வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, 

நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறி விமர்சிக்க தேவையில்லை. நான் கிரிக்கெட்டை அதிகமாக காதலிப்பதாலேயே விளையாடிக் கொண்டிருக்கிறேன். என் ஆட்டத் திறன் நன்றாக இருப்பதாக உணர்கிற வரை தொடர்ந்து விளையாடுவேன். நாட்டுக்காக விளையாடுவதை விட வேறு எதுவும் பெரிது கிடையாது. என்னை விமர்சிப்பவர்கள் அவர்களின் சொந்த கேள்விக்கு அவர்களாலேயே பதில் சொல்ல முடியாது. அவர்கள் யாராலும் என்னை கணிக்க முடியாது. நான் என்ன நினைக்கிறேன் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்