முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸ் புயலுக்கு 6 பேர் பலி

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

மணிலா, டிச. 29 - பிலிப்பைன்சில் உகாங் புயல் தாக்குதலால் வெவ்வேறு இடங்களில் 6 பேர் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ் தினத்தன்று உகாங் புயல் தாக்கியது. இதில் அக்லான் மாகாண தலைநகர் கலிபோ, பனே தீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்தது. ஈஸ்டர்சமர் மாகாணத்தில் புயல் காரணமாக வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். லாயிலோ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் நிலச்சரிவில் சிக்கியதாக ஒருவர் பலியானது குறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் விசாரித்து வருவதாக பாதுகாப்பு துறை தலைவர் பெனிட்டோ தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்டவர் ஒருவேளை ஒரு சிலரால் அடித்து மலை இடுக்குகளில் தள்ளி விட்டிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறினார். நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டனா தீவை கடந்த சில வாரங்களுக்கு முன்பு போபா புயல் தாக்கியதில் 1,067 பேர் உயிரிழந்தனர். 800 பேரை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்