எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், ஏப்.18 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் பரிதாப தோல்வி அடைந்தது ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 15-வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் சங்ககாராவின் டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர்களாக சன்னி சோஹால் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் சோகால் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 13 ஐ எட்டியபோது ஹாரிஸின் பந்துவீச்சில் கிளீன்போல்டானார் சோஹால். அடுத்து கேப்டன் சங்ககாரா, தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 11 ஓவர்களில் 88 ரன்களை எட்டியபோது அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சங்ககாரா, சாவ்லாவின் பந்தில் மெக்லாரனால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 35. அடுத்த ஓவரிலேயே தவானும் 45 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவரை வல்தாட்டி வீழ்த்தினார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள். அடுத்து ஜோடிசேர்ந்த டுமினி, சிப்லி இணை அதிக ரன்களை சேர்க்க தவறியது. 12 பந்துகளில் 14 ரன்களை எடுத்திருந்த சிப்லியும் வல்தாட்டியின் பந்திலேயே கிளீன் போல்டானார். அடுத்து கிறிஸ்டியன் களமிறங்கினார். இந்நிலையில் 18 வது ஓவரில் அணியின் எண்ணிக்கை 129 ஆக இருந்தபோது 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த டுமினி, மெக்லாரனின் பந்துவீச்சில் சாவ்லாவிடம் பிடிகொடுத்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக கிறிஸ்டியன் ரன்களை சேர்த்ததால் டெக்கான் அணியின் ஸ்கோர் ஓரளவு கெளரவமான நிலையை எட்டியது. 14 பந்துகளில் 30 ரன்களை அடித்த கிறிஸ்டியன் 19 வது ஓவரில் வல்தாட்டியின் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 7 விக்கெட் இழப்பிற்கு 156. அடுத்து இறங்கிய அமித் மிஸ்ரா ரன் எதுவும் எடுக்காத நிலையில் வல்தாட்டியின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். இறுதியில் டெக்கான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது.
பஞ்சாப் அணி சார்பில் மிகப் பிரமாதமாக பந்துவீசிய வல்தாட்டி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெக் லாரன் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் மற்றும் சாவ்லா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் அதிரடி வீரர் வல்தாட்டி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினர். இவர்கள் இருவரின் அதிரடியில் டெக்கான் பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது அதிரடியைக் காட்டிய வல்தாட்டி இந்த போட்டியிலும் ஜொலித்தார். இதனால் பஞ்சாப் அணி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 136 ரன்களை குவித்தது. இந்த நிலையில் 46 பந்துகளில் 61 ரன்களை குவித்திருந்த கில்கிறிஸ்ட், அமித் மிஸ்ராவின் சுழலில், ரவி தேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நாயர், வல்தாட்டியுடன் ஜோடி சேர்ந்தார். 47 பந்துகளில் 75 ரன்களை எடுத்திருந்த வல்தாட்டி, மிஸ்ராவின் பந்துவீச்சில் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். வல்தாட்டியின் 75 ரன்களில் 8 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் 17.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களை எட்டியது பஞ்சாப் அணி. நாயர் 13 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது. 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 75 ரன்களையும் குவித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர் வல்தாட்டி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 6 வது இடத்தை பெற்றது. டெக்கான் சார்ஜர்ஸ் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியையும், 3 தோல்விகளையும் பெற்று புள்ளிகள் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் வளர்ச்சியை பரம்பரை சொத்து வரி முறை சிதைத்து விடும்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை சாடியுள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.