எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, ஏப்.- 19 - ஐ.பி.எல். போட்டித் தொடரில் கொல்கத்தாவின் அனல் பறந்த பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுருண்டது. மேலும் இந்த ஐ.பி.எல். தொடரில் மிகக் குறைந்த ரன்களையும் ராஜஸ்தான் அணி பதிவு செய்தது. காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஐ.பி.எல்.லின் 17-வது போட்டியில் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதனால் ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் பவுனிக்கர் ஆகியோர் களமிறங்கினர். துவக்க வீரர்கள் அதிரடியாக துவக்கினர். அணியின் எண்ணிக்கை 24 ஐ எட்டியபோது அபாயகரமான வீரர் வாட்சனை, கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி கிளீன் போல்டு செய்தார். அடுத்ததாக பாஸல் களமிறங்கினார். மேலும் 4 ரன்கள் அணியின் எண்ணிக்கையில் சேர்ந்தபோது மற்றொரு துவக்க ஆட்டக்காரர் பவுனிக்கரும் 15 ரன்கள் எடுத்த நிலையில் இக்பால் அப்துல்லாவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிஸ்லாவால் ஸ்டெம்ப் அவுட் செய்யப்பட்டார். இதனால் ராஜஸ்தான் அணி 4.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து ரவத் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 38 க்கு உயர்ந்தபோது 3 ரன்களை எடுத்திருந்த பாஸல், இக்பால் அப்துல்லாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். அணியின் எண்ணிக்கை மேலும் 5 ரன்கள் உயர்ந்து 43 ரன்களை எட்டியபோது 11 ரன்களை எடுத்திருந்த ரவத் ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் பொறுப்பற்ற ஆட்டம் தொடர்ந்ததால் அந்த அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தவண்ணம் இருந்தது. அந்த அணியின் மீனாரியாவின் அதிகபட்ச ஸ்கோரே 21 தான். இவர் பாலாஜியின் பந்துவீச்சில் பாட்டியாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டானதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்களை மட்டும் எடுத்தது. இதுவே 4 வது ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா தரப்பில் பாலாஜி 3 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல்ஹசன் 2 விக்கெட்டுகளையும், பிரட்லீ, இக்பால் அப்துல்லா, இர்பான் பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
20 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. ஆனால் அந்த அணியின் அதிரடி துவக்க வீரர் காலிஸ் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஷேன் டைட்டின் பந்துவீச்சில் விழுந்தார். அடுத்ததாக கொல்கத்தா கேப்டன் காம்பீர் களமிறங்கினார். இலக்கு எளிதானதால் நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் விளையாடினர். அணியின் எண்ணிக்கை 31 ஐ அடைந்தபோது மற்றொரு துவக்க வீரரான பிஸ்லா 22 பந்துகளில் 9 ரன்களை எடுத்த நிலையில் வார்னேவின் சுழலில் விழுந்தார். ஆனால் அதன் பிறகு களமிறங்கிய மனோஜ் திவாரி மற்றும் காம்பீர் ஜோடி இலகுவாக இலக்கை அடைந்தது. கொல்கத்தா அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்களை எடுத்தது. காம்பீர் ஆட்டமிழக்காமல் 35 ரன்களையும், திவாரி ஆட்டமிழக்காமல் 30 ரன்களையும் எடுத்தனர். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
3 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய லட்சுமிபதி பாலாஜி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
படுதோல்வி குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் வார்னே, தங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆடியதே அணியின் தோல்விக்கு காரணம் என்று தெரிவித்தார். மேலும் தனது அணி வீரர்கள் குழந்தைத்தனமாக செயல்பட்டனர் என்றும் தெரிவித்தார். இருந்தாலும் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக தமது அணி செயல்படும் என்றும் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.