எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாஸ்டன், ஏப். 20 - அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் மாரதான் போட்டியில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒரு தீவிரவாதி போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியானான். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக இந்த விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய இருவரது படங்களை அமெரிக்க விசாரணை அமைப்பான எப்.பி.ஐ வெளியிட்டது. சம்பவம் நடந்த பாஸ்டன் தெருவில் உள்ள சி.சி.டி.வி.க்களில் பதிவாகியுள்ள வீடியோக்களை வைத்து இரண்டு நபர்கள் மீது எப்.பி.ஐ. க்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வாட்டர்டவுன் பகுதியில் காரில் வந்த ஒருவரை துப்பாக்கி முனையில் வழிமறித்த ஒருவன் அவரை காருடன் கடத்தினான். பின்னர் காரில் இருந்தவரை இறக்கி விட்டுச் சென்றான். இந்த விவரம் அறிந்த போலீசார் அந்தக் காரை விரட்டிச் சென்ற போது, அந்த நபர் காரில் இருந்து வெடிகுண்டுகளை வெளியே வீசினான். இதையடுத்து எப்.பி.ஐ. யும் போலீசாரும் அந்தக் காரை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் காரில் இருந்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பின்னர் தான் அவன் பாஸ்டன் மாரத்தான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவன் என்பது தெரியவந்தது. பலியானவன் படத்தில் கருப்புத் தொப்பியுடன் இருப்பவன் ஆவான். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இன்னொரு நபரை (வெள்ளைத் தொப்பியுடன் இருப்பவர்) போலீசார் தேடி வருகின்றனர். இந்த நபரும் அந்தக் காரில் தான் இருந்ததாகவும், பின்னர் அவன் மட்டும் தப்பி விட்டதாகவும் தெரிகிறது.
பாஸ்டன் நகரில் கடந்த 15 ம் தேதி மராத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்ற போது அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து 3 பேர் உயிர் இழந்தனர். 176 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் பலியானவர்கள் மார்ட்டின் ரிச்சர்டு (8), கிறிஸ்ட்லி காம்பெல் (29), சீனாவை சேர்ந்த மாணவர் லூ லிங்ஸி என்று தெரியவந்தது. இதில் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 10 பேர் கை, கால்களை இழந்து விட்டனர். பலரது உடலில் புதைந்துள்ள வெடிகுண்டு துகள்கள், பால்பேரிங் குண்டு ஆகியவைகளை டாக்டர்கள் அகற்றினர். பலரது உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.
அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கிய இந்த குண்டு வெடிப்பு குறித்து உள்ளூர் போலீஸ் ஒத்துழைப்புடன் எப்.பி.ஐ. அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முதல் கட்ட விசாரணையில், தீவிரவாதிகள் பயன்படுத்தும் குக்கர் வெடிகுண்டு என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பால்பேரிங், ஆணிகள் ஆகியவை கொண்டு இந்த குக்கர் குண்டை தயாரித்து கறுப்புநிற நைலான் பைகளில் வைத்து எடுத்துச் சென்று மராத்தான் பந்தயம் நிறைவடையும் பகுதியில் வைத்து வெடிக்க செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் சம்பவம் நடந்த பாஸ்டன் தெருவில் உள்ள சி.சி.டி.வி. க்களில் பதிவாகியுள்ள வீடியோக்களை வைத்து இரண்டு நபர்கள் மீது எப்.பி.ஐ. க்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு கடையில் (டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்) வைத்திருந்த காமிராவில் பதிவான வீடியோ காட்சி எப்.பி.ஐ. போலீசாரிடம் சிக்கியது. அதில் 2 வது குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் ஒரு நபர் செல்போனில் பேசி கொண்டு நிற்கும் காட்சி பதிவாகியுள்ளது. சற்றுநேரத்தில் குண்டு வெடிக்க, மக்கள் சிதறி ஓட, அந்த நபர் மட்டும் மற்றவர்களுக்கு மாறுபட்டு எதிர்திசை நோக்கி ஓடும் காட்சியும் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் தான் இதில் தொடர்புடைய ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இன்னொரு நபரைப் பிடிக்க இப்போது எப்.பி.ஐ. தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.
இந்த சம்பவத்தாலும், மசாசூசெட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பத்தாலுமம் பாஸ்டன் நகரில் பெரும் பரபரப்பு நிலவியது. தப்பியோடிய தீவிரவாதி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் யாரும் வீட்டைத் தட்டினால் திறக்க வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
2-ம்கட்ட வாக்குப்பதிவு: இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்
25 Apr 2024புதுடெல்லி, இன்று 2-ம்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு இறுதிக்கட்ட பணகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.