முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மேலும் ரூ.1 கோடி பரிசு

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஏப். 29 - உலகக் கோப்பையை வென்ற கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு ரூ. 2 கோடி ஊக்கத் தொகையாக தரப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக மொத்த அணி வீரர்களுக்கு ரூ. 1 கோடி தான் ஊக்கத் தொகையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது ரூ. 2 கோடி யாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

ஊக்கத்தொகை அதிகரிப்புக்கு காரணம் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் தெரிவித்த அதிருப்தியே காரணம் என்று நே ற்று கூடிய கிரிக்கெட் வாரிய நிலைக் குழு தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் ரூ. 2 கோடி வரை ஊக்கத் தொகை வேண்டும் என்று கேட்டதாகவும் தெரியவருகிறது. 

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் என். சீனிவாசன் கூறியதாவது - உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அறிவி க்கப்பட்ட ஊக்கத் தொகை ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 2 கோடியாக உயர்த்தப்படுகிறது என்றார். 

10 - வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங் கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தின. துணைக் கண்டத்தில் நடந்த இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெ ரும் வரவேற்பைப் பெற்றது. 

உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. பரபரப்பாக நடந்த இறுதிச் சுற்றில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 2 -வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்