முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. யிடமிருந்து தகவல் பெற பல்வாவுக்கு அனுமதி

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.4 - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சி.பி.ஐ.யிடம் தனது வழக்கு தொடர்பான விவரங்களை கேட்டு மனு செய்ய ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் சிக்கி சிறையில் இருப்பவர் பல்வா. இவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடர்பான விவரங்கள், நீரா ராடியாவுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் பதிவுகள் போன்றவற்றை அளிக்க வேண்டும் என்று கோரினார். இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஷைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்