எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி,பிப்.28 - பஞ்சபள்ளி சின்னலாறு அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை குளிகரை ஏரி வழியாக விவசாய நிலங்களுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை பங்கேற்று பேசினார்.
அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் திரளாக கலந்து கொண்டு வருவதன் மூலம் மைனாரிட்டி தி.மு.க. அரசு வரும் தேர்தலில் தோல்வி அடைவது உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. குறிப்பாக கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் தமிழகமெங்கும் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசு அதற்கு நேரிடையாக இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் பிரச்சனை குறித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது அ.தி.மு.க. மட்டுமே. வீராணம் திட்டத்தில் பைப்போட்டு மக்களை ஏமாற்றியது போல தற்போது ஓகேனக்கல் கூட்டுக்குடி நீர் திட்டத்திலும் பைப் போட்டு மக்களை ஏமாற்றி வருகிறார் கருணாநிதி. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்க வந்ததும் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும். இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரு கேபினட் மத்திய அமைச்சர் மகா ஊழல் செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது இதுவே முதல் தடவை. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா ரூ.180 ஆயிரம் கோடி ஊழல் செய்து அந்த பணத்தை கருணாநிதி குடும்பத்துடன் பங்கு போட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
பஞ்சம்பள்ளி சின்னலாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக 10 ஏரிகளில் கால்வாய் மூலம் விவசாய தேவைக்கு தண்ணீர் கொண்டு செல்ல அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் அதை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு விட்டது. இதனை கண்டித்தும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்த கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாலக்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு. தம்பித்துரை தலைமை வகித்து பேசினார். தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பாலக்கோடு எம்.எல்.ஏவுமான கே.பி. அன்பழகன் முன்னிலை வகித்தார்.
மேலும் மு. தம்பித்துரை பேசும் போது,
பஞ்சம்பள்ளி சின்னலாறு அணையின் மூலம் விவசாயிகளுக்கு ஏரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வகுக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு விவசாயிகளையும் கிராமப்புற மக்களையும் வஞ்சித்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் அவர்பேசும் போது, அடுத்து அமையவிருக்கும் அ.தி.மு.க ஆட்சியின் போது இத்திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றார். கடுமையான விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஊழல் போன்ற பிரச்சினைகளால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். தி.மு.க. அரசையும் கருணாநிதியையும் ஆட்சி கட்டிலில் இருந்து தூக்கி எறியும் காலம் வெகு விரைவில் வந்து விட்டதாக தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
புட்நோட் :
தருமபுரி மாவட்டம் பஞ்சம்பள்ளி அணையின் உபரி நீரை பாலக்கோடு சுற்றியுள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தை செயல் படுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தம்பித்துரை எம்.பி., பேசினார். உடன் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., வும் நிர்வாகிகளும் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
2-ம்கட்ட வாக்குப்பதிவு: இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்
25 Apr 2024புதுடெல்லி, இன்று 2-ம்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு இறுதிக்கட்ட பணகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.