முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டு வெடிப்பில் துப்பு கிடைத்துள்ளதாக ப. சிதம்பரம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,செப்.11 - டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நம்பிக்கையூட்டும் துப்புகள் கிடைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 88 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவத்தில் நம்பிக்கையூட்டும் துப்புகள் கிடைத்துள்ளன. எனினும் இவற்றையே முழுமையாக கருத முடியாது. மேலும் இந்த சம்பவத்தில் வெளிநாட்டு குழுக்கள் ஈடுபட்டுள்ளதா என்பதை இப்போது கூற முடியாது. டெல்லி சம்பவம் நமக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. 

இன்னும் ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பை எதிர்கொள்ளும் மற்ற நாட்டு மக்களிடம் இருந்து நாம் படிப்பினை பெற வேண்டும். மக்கள் அனைவரும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை விசாரிப்பதில் அனுபவமிக்க 200 போலீசார் இடம் பெற்றுள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்