முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ கல்விக்கு ஒரே பொது நுழைவுத் தேர்வு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச் .- 9  - மருத்துவக் கல்விக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவு தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  எம்.பி.பி.எஸ். படிப்பு, அதற்கு அடுத்தான மருத்துவ மேற்படிப்பு போன்றவற்றுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நீதிபதிகள் ஆர்.வி. ராகவேந்திரன், ஏ.கே. பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ கல்விக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவு தேர்வு நாடு முழுவதும் ஒன்று போல இருக்க வேண்டும். இது தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். 

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதிலளித்தது. அதில் இந்த விஷயத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக மாநில அரசுகளிடம் பேச்சு நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது. சிறுபான்மையினர் நடத்தி வரும் சில மருத்துவ கல்லூரிகள் தனியாக நுழைவு தேர்வுகளை நடத்தி வந்தன. . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்