முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

  1. கேழ்வரகில் கால்சியம் சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.
  2. மூட்டு வலி இருப்பவர்களும் தினை அரிசியை உணவாக எடுத்துகொள்ளலாம். வளரும் குழந்தைகளுக்கு தினை அரிசியை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் எலும்புகள் உறுதியாகும் வளர்ந்த பிறகும் எலும்பு தேய்மானம் உண்டாக்காது.
  3. கேழ்வரகை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும். 
  4. நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் கேழ்வரகை சாப்பிடுவதால் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும்,மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.
  5. கேழ்வரகை மாவாக இடித்து உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் ஆண்கள் மற்றும் பெண்களின் மலட்டு தன்மை நீங்கும். 
  6. கேழ்வரகை எடுத்து கொள்வதால் நரம்பு தளர்ச்சி குறைபாடுகள் நீங்கும்.
  7. கேழ்வரகை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் கண் எரிச்சல் தீரும்.
  8. கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா போன்ற  நோய்கள் குணமாகும். 
  9. கேழ்வரகு உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும்.
  10. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கேழ்வரகு கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும்.
  11. கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. 
  12. கேழ்வரகு கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. 
  13. கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.
  14. கேழ்வரகு நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
  15. கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக்  கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்