முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் இன்று முதல் பக்தர்களுக்கு கூடுதலாக 2 லட்டுகள்

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதமாக தேவஸ்தானம் சார்பில் 2 லட்டுகள் வழங்கப்படுகிறது.

இலவச தரிசனத்திலும்,மலைப்பாதையில்  நடந்துவந்து திவ்யதரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு சலுகை விலையில் ரூ.10 விலையில் 2 லட்டுகள் பெறுவதற்கான டிக்கெட் வழங்கப்படுகிறது. மேலும் கோயிலுக்கு வெளியே கூடுதல் லட்டுகள் பெறவிரும்பும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் தலா ரூ.50 வீதம் விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும் பக்தர்கள் கூடுதல் லட்டு பெற கோயிலுக்கு வெளியே இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு லட்டுகள் வாங்குவதோடு ஏமாற்றம் அடைகிறார்கள். இதனை தடுக்க தேவஸ்தானம் இன்று முதல் இலவச மற்றும் திவ்ய தரிசனத்தில் சுவாமிதரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ரூ.10 விலையில் 2லட்டும் ரூ.25 விலையில் 2லட்டும் கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளது.

மேலும் லட்டு தேவைப்பட்டால் கோயில் வெளியே லட்டு வழங்கும் இடத்தில் ரூ.50க்கு 2 லட்டுகள் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளலாம் என்று தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ தெரிவித்துள்ளார்.

லட்டு விற்றவர் கைது, திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு லட்டு விற்பனை செய்த திருநெல்வேலியை சேர்ந்த அன்புவேல் என்பவரை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பிடித்தனர். அவரை திருமலை முதலாவது காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர் கடந்த ஒரு வருடமாக திருமலையில் தங்கியிருந்து லட்டுகளை அதிக விலைக்கு விற்றுவந்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து 52 லட்டு டிக்கெட் மற்றும் ரூ.22 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து