முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து சதாம் உசேன் ஊரை மீட்க சண்டை

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

திக்ரீத் - ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊர் திக்ரித். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஜூன் மாதம் திக்ரித் நகரை கைப்பற்றினார்கள். இது போல ஈராக்கில் பல இடங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவற்றை மீட்பதற்காக ஈராக் ராணுவம், குர்தீஷ் படையினர் மற்றும் சியா பிரிவு படையினர் போரிட்டு வருகிறார்கள்.

அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து பல பகுதிகளை மீட்டு வருகின்றனர். தற்போது திக்ரீத் நகரை மீட்பதற்காக 30 ஆயிரம் வீரர்களை கொண்ட படை அங்கு சென்றுள்ளது. அவர்கள் திக்ரீத் நகரை 3 பக்கமாக சூழ்ந்துள்ளனர். திக்ரீத்தின் புறநகரான அல்பெய்ப், அல்தபூர், மசராத் அல் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். திக்ரீத் நகரையும் கிர்குக் நகரையும் இணைக்கும் சாலையையும் கைப்பற்றி விட்டனர். இந்த சாலை வழியாகத்தான் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தேவையான பொருட்கள் வெளியிடங்களில் இருந்து வந்து கொண்டிருந்தன.

இதை கைப்பற்றி விட்டதால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு வர வேண்டிய ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் தடைபட்டுள்ளன. தொடர்ந்து அந்த பகுதியில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. சாலை பகுதி முழுவதும் ஏராளமான கன்னிவெடிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் புதைத்து வைத்துள்ளனர். 400க்கும் மேற்பட்ட கன்னிவெடிகளை அகற்றி விட்டு ராணுவத்தினர் முன்னேறி வருகிறார்கள். இன்னும் ஓரிரு வாரங்களில் திக்ரீத் நகரை முழுமையாக மீட்டு விடுவோம் என்று ஈராக் ராணுவ தளபதி ஒருவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து