முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமன் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தொடர்பில்லை: அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - ஏமன் மசூதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டதாக ஆதாரங்கள் இல்லாததால் தாக்குதலுக்கு அந்த இயக்கத்தை தொடர்புப்படுத்த முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏமன் தலைநகர் சனா மற்றும் சாடா மாகணங்களில் மசூதிகளில் தற்கொலை படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 குண்டு வெடிப்புகள் நடந்த இந்த தாக்குதலில் தற்போதைய நிலையில் 137 பேர் பலியாகினர். 350க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இது போன்ற தாக்குதல் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜோஷ் ஏர்னெஸ்ட், தற்போதைய நிலையில் ஏமன் தாக்குதலுக்கு அந்நாட்டு தீவிரவாத இயக்கங்களுக்கு ஐ.எஸ். உதவியதாக எந்த வியூகமும் செய்ய முடியாது. அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து