எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர் - காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்லுமாறும் அரசு நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்த வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காஷ்மீரில் கடந்த செப்டம்பர் மாதம் ஜீலம் நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஜீலம் நதியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய காலை நிலவரப்படி, வெள்ள அளவு அனந்தநாக் மாவட்டம் சங்கம் பகுதியில் 22.8 அடியாகவும், ராம் மனுஷி பாக் பகுதியில் 19 அடியாகவும், பந்திபூரா மாவட்டம் ஆஷிம் பகுதியில் 11.55 அடியாகவும் இருந்தது. வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மாவட்ட நிர்வாக அதிகாரி,
வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் உள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு வருமாறும், மாவட்ட நிர்வாகத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜீலம் நதிக் கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
ராஜ்பாக், ஜவஹர்நகர், கோக்ஜிபாக், வாசிர்பாக் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் கூடுதலாக இருப்பதால், இப்பகுதிகளில் வாழும் மக்கள் நேற்று முன்தினம் மாலை முதலே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கினர். ரெசிடன்ஸி சாலை, லால் சவுக் பகுதிகளில் உள்ள வணிகர்கள் தங்கள் கடைகளில் உள்ள பொருட்களை அவசர அவசரமாக இடம் மாற்றம் செய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் ஜீலம் நதியின் கோரத் தாண்டவத்தில் சிக்கிய பகுதிகளில் இவைகளும் அடங்கும்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழைக்கு பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 80 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழை காரணமாக சிரார் இ சரீப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு 18 வீடுகள், 44 கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலச்சரிவில் சிக்கிய 16 பேரை காணவில்லை. மேலும் மழை வெள்ளத்தில் சிக்கிய 21 பேரும் மாயமாகி விட்டனர். பட்காம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 3 வீடுகள் புதைந்தன. அந்த வீடுகளில் இருந்த 12 பேரும் புதைந்திருக்கலாம் என்று தெரிகிறது. மொத்தம் 49 பேர் பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது. கடந்த சனிக்கிழமை மாலை முதல் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
|
ஸ்ரீநகர்-குல்மார்க், ஸ்ரீநகர்-குப்வாரா, ஸ்ரீநகர்-பந்திப்பூரா இடையேயான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெருமளவில் பாதுக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் வரும் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மழைவெள்ளம் காரணமாக மாநிலத்தின் 7 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 100 பேர் காஷ்மீர் விரைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் 50 பேர் வீதம் 2 குழுக்களாக மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் தலைவர் ஓ.பி.சிங் கூறியுள்ளார்.
வெள்ள நிலவரத்தை நேரில் பார்வையிட பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி காஷ்மீருக்கு விரைந்துள்ளார். காஷ்மீருக்கு புறப்படும் முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நக்வி, வெள்ள நிவாரண, மீட்புப் பணிகளில் காஷ்மீர் மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் நிலையில் இருக்கிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் ராகுல் காந்தி பேச்சு
26 Apr 2024பெங்களூரு:காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
இ.வி.எம்.-ல் பதிவான வாக்குகளோடு ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய கோரிக்கை நிராகரிப்பு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி:தேர்தலின் போது இ.வி.எம்-ல் பதிவான வாக்குகளோடு விவிபாட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து தீர்பளித்த சுப்ரீம் கோர்ட்,
-
காஷ்மீர்ல் எண்கவுன்டர்:2 பயங்கரவாதிகள் பலி
26 Apr 2024ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
-
சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில் தலைமை நீதிபதி அறிவிப்பு
26 Apr 2024புதுடெல்லி:“சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்தி
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.