முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் குண்டு வெடிப்பு: 33 பேர் பலி

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 33 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.ஆப்கானிஸ்தானின் நங்கஹர் மாகாணத்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் சுமார் 33 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


குண்டுவெடிப்பு தனியார் வங்கிக்கு அருகே நடந்ததாக மாகாண காவல் ஆணையர் ஃபசல் அகமது தெரிவித்தார். தாக்குதலில் சிக்கிய அனைவரும் வங்கிக்கு வந்தவர்கள் அல்லது சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து