முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதியமைச்சர் மாணி பதவி விலக வேண்டும் : கேரளத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம் - மதுபான பார் உரிமையை நீட்டிக்க ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நிதியமைச்சர் கே.எம். மாணி பதவி விலகக் கோரி மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியினர் தலைமைச் செயலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மார்ச் 13ம் தேதி சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏ.விடம் அத்துமீறி நடந்து கொண்ட எம்எல்ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போராட்டத்தின் போது வலியுறுத்தினர். இந்த முற்றுகை போராட்டத்தை கொடியேறி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு எம்எல்ஏ.க்கள் உட்பட பலரை கைது செய்த போலீஸார், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். நிதியமைச்சருக்கு எதிராக முதல் தகவலறிக்கை பதிவு செய்து 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் அவர் அமைச்சராகத் தொடர்வதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து