முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கங்களை வென்ற தமிழக மாணவிகள்

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை: சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவில், பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வி மற்றும் பிரியதர்சினி ,ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களை சென்னை திரும்பினர்.

சீனாவின் விவான் நகரில், ஆசிய பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், வெள்ளிப் பதக்கமும், ப்ரியதர்ஷினி மும்முறை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி ராமலெட்சுமி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, உத்தரவுப்படி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட மிகச்சிறப்பான பயிற்சிகள் காரணமாகவே, தங்களால் இந்த வெற்றியைப் பெறமுடிந்தது என சீனாவிலிருந்து பதக்கங்களுடன் சென்னை திரும்பிய மாணவிகள் பெருமிதம் தெரிவித்தனர். தாங்கள் சீனா செல்ல நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து