முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாம் பயன்படுத்திய பொருட்கள் அண்ணா பல்கலை. மாணவர்கள் பார்வையிட்டனர்.

புதன்கிழமை, 29 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் அப்துல்கலாம் தங்கியிருந்த அறையில் அப்துல்கலாம் பயன்படுத்திய பொருட்கள் குறித்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியில் இருந்து ஒய்வு பெற்ற அப்துல்கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் உள்ள 11 வது தளத்தில் தங்கியிருந்தார். அவரை போன்றே அறையும் மிகவும் எளிமையாக இருந்தது.

அப்துல்கலாமின் அறையில் இருந்த பொருட்கள்:-

உணவுக்கான 2 தட்டுகள், 2 டம்ளர், 2 டீ கப்கள், 2 பிளாஸ்க்குகள், நடைபயிற்சிக்கான ‘ஷூ’, 2 செருப்புகள், அவர் பெற்ற விருதுகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான புத்தகங்கள், குறிப்பு எடுக்கப்பட்ட நோட்டுகள், ‘பத்திரிகைகளில் வெளியான சில கட்டுரைகள், பல்வேறு மாநில முதல்வர்கள் எழுதிய கடிதங்கள் போன்றவற்றை கோப்புகளில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.அத்துடன் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் அடங்கிய கேசட் மற்றும் சாதாரண கேசட் பிளேயர், 2 புனித குரான் இவைகள் மட்டுமே அவருடைய அறையில் காணப்பட்டன. இந்த அறைக்கு சென்று அப்துல் கலாம் பயன்படுத்திய பொருட்களை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து