முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பு

புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் திங்கட்கிழமை நடந்தது. இத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் களம் கண்டன. இதில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற 7 இடங்கள் தேவைப்படுகிற நிலையில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவோடோ அல்லது மற்ற எம்.பி.க்கள் ஆதரவோடோ அவர் ஆட்சி அமைக்க முடியும்.

இந்த நிலையில் ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கொழும்பில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டின் 15-வது பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

கடந்த 1993, 2001 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக ரணில் வகித்திருக்கிறார். தற்போது 4-வது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்