எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த பலமான அடியை விட சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுங்கள் என்றும், தி.மு.க. - காங்கிரஸ் கொள்ளை கூட்டணியை ஒழிக்க வேண்டும் என்றும் மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மே 16-ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று மதுரை சுற்றுச்சாலை, பாண்டிகோயில் அருகில் உள்ள அருள்மிகு பாண்டி முனீஸ்வரர் திடலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தருமபுரி மற்றும் தஞ்சாவூர் வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது., காங்கிரஸ்-தி.மு.க. நடத்திய மத்திய கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஊழல், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுவசதியில் ஊழல், காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என விளையாட்டிலே கூட விளையாடிய கூட்டணி தான் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பதை மறவாதீர்கள்.
முன்பு ஆட்சியில் இருந்த போது சுருட்டியது போதாதென்று மேலும் சுருட்ட வாய்ப்பு கேட்டு உங்களை தேடி வாக்கு கேட்க தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர் வருவார்கள். மறுபடியும் உங்கள் வாக்குகளைப் பெற்று கொள்ளையடிக்கலாம் என்ற எண்ணத்தில் உங்களை தேடி அதே கொள்ளைக் கூட்டம் வரும். அவர்களுக்கு, அந்த தி.மு.க-வுக்கு, இந்தத் தேர்தலில், கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கொடுத்த அடியை விட, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் கொடுத்த அடியை விட, பலமான அடியை நீங்கள் கொடுத்தால் தான் அந்தக் கொள்ளைக் கூட்டம் நிரந்தரமாக ஒழியும். தி.மு.க - காங்கிரஸ் கொள்ளைக் கூட்டணியையும் ஒழிக்க வேண்டும். அதற்கு 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் கொடுத்த அடியை விட, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் கொடுத்த பலமான அடியை விட, வரும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுத்து, அந்தக் கூட்டணியை, கொள்ளைக் கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தி.மு.க-காங்கிரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சி ஒரு அராஜக ஆட்சி. தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக மாற வேண்டும் என்று தான் நீங்கள் 2011-ஆம் ஆண்டில் ஒரு அமைதிப் புரட்சியை ஏற்படுத்தினீர்கள். உங்களது எண்ணப்படியே இன்றைக்கு தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக இருந்து வருகிறது. யாரும் எந்த வித அச்ச உணர்வும் இன்றி வாழ முடிகிறது. நடமாட முடிகிறது. தங்களது சொத்துகளை அனுபவிக்க முடிகிறது. அன்றைய தி.மு.க. அரசும், தி.மு.க.-வினரும் காவல் நிலையங்களுக்கு சென்று காவலர்களை அச்சுறுத்திய காரணத்தினால் தான் சட்டம்-ஒழுங்கு அப்போது சீர்குலைந்திருந்தது. அதை மாற்றி சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியது நான் தான்.
இன்று எந்த அரசியல்வாதியும் காவல் நிலையத்திற்கு சென்று காவலர் பணிகளில் தலையீடு செய்ய முடியாது. எனவே தான் சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்படுகிறது. குற்றங்கள் குறைந்து வருகின்றன. அன்றைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை, சமூக விரோத கும்பல் உதவியுடன் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களை மிரட்டி அவர்களின் சொத்துகளை அபகரித்தனர்.
2011-ம் ஆண்டு நான் ஆட்சி பொறுப்பேற்ற பின், நில அபகரிப்பு புகார்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்; நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டேன். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 3,264 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டனர். 3,678 கோடி ரூபாய் மதிப்புள்ள 5,193 ஏக்கர் நிலம் மற்றும் 35 லட்சத்து 78 ஆயிரம் சதுர அடி வீட்டுமனைகள் நில அபகரிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
1,084 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இதில் 3 வழக்குகளில் எதிரிகள் தண்டனை பெற்றுள்ளனர். சிறப்பு நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் விரைந்து முடிவுக்கு வர நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கு நிலைமை சீரமைக்கப்பட்டு உள்ளதோடு மட்டுமல்லாமல் குற்றங்களும் தற்போது குறைந்துள்ளன. கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற கொலைகள், ஆதாயக் கொலைகள், கூட்டுக் கொள்ளைகள், கொள்ளைகள், களவு வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள் என பல்வேறு குற்றங்களின் எண்ணிக்கை தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் குறைந்துள்ளன.
மதுவிலக்கைப் பற்றி இப்பொழுது பல அரசியல் கட்சித் தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க. கருத்தினை இப்போது தெரிவிக்க விரும்புகிறேன். எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.