முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம்: முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2016      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான ஓ.ராஜகோபால் கூறியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நேமம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஓ.ராஜகோபால் நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.,

கேரள மாநிலத்தை ஆட்சி செய்யும் கம்யூனிஸ்டு கட்சியினரின் செயல்பாடுகள் எந்த வகையிலும் திருப்திகரமாக இல்லை. அவர்களுடைய கட்சியை சேர்ந்தவர்கள் பெரிய தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். அதேநேரம் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களின் பிரச்சினைகள் என்றால் போலீஸ் படையை அனுப்புகின்றனர். இதனை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை சில கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்