முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-நியூசிலாந்து 3வது ஒரு நாள் கிரிக்கெட் இன்று மொகாலியில் நடக்கிறது

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

மொகாலி,(சண்டிகர்) :  இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலி யில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிறு) நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என டோனி தலைமையிலான இந்திய அணி களம் இறங்குகிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி 3-0 ஆட்ட கணக்கில் மகத்தான வெற்றி வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பின்னர்  இந்த அணிகள் இடையே தற்போது ஒரு நாள் தொடர் நடக்கிறது.  ஒரு நாள் தொடரில் இந்திய அணி அனுபவம் மிக்க டோனியின் தலைமையில் ஆடுகிறது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.

இதனால் தற்போது இந்த தொடர் 1-1 என சமநிலை யில் உள்ளது. இந்த நிலையில் சண்டிகரில் உள்ள மொகாலி பஞ்சாப் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 3வது ஒரு நாள் கிரிக் கெட் போட்டி இன்று(ஞாயிறு) நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்